நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே;
மலையது துயரது நேரிடினும்
அது மழையென தூரிட துணை புரிவாய்;
நிலையது கவலை ஆயினுமே
அது களைந்திடும் மேகமென ஆகிட தயை புரிவாய்;
கலைமகள் மலரதனில் வீற்று வீணையது மீட்டிடவே;
நிதமதை காண்பதுவே உளமது தெளிவது நாளும் அடைந்திடுமே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே;
மலையது துயரது நேரிடினும்
அது மழையென தூரிட துணை புரிவாய்;
நிலையது கவலை ஆயினுமே
அது களைந்திடும் மேகமென ஆகிட தயை புரிவாய்;
கலைமகள் மலரதனில் வீற்று வீணையது மீட்டிடவே;
நிதமதை காண்பதுவே உளமது தெளிவது நாளும் அடைந்திடுமே;
பொருளது அழிவது புகும் ஆசை தந்திடாது காப்பாய்;
வெறும் சிலையிது என்றாகிடாது விழியதனில் உயிராவாய்;
மலைமகள் நிலவென சுடர் ஒளி ஆகையிலே;
மனமது மயங்கிடாது மதியது மலர்ந்திடுதே;
பெரு வானமெனவே ஞானம் தருவாய்;
நல் கானமது நாவினில் வர வரமருள்வாய்;
கோலமகள் எழில் முகம் பார்க்கையிலே;
எழும் மனக்கோபங்கள் அனைந்திடுதே;
நின் திருவுரு அழகினைக் காண்கையிலே;
மனவுருகுது மலரடி தாழ் பணிந்திடவே;
மலரிதழ் புன்னகை பூத்திடவே;
பெரும் மனக்குழப்பங்கள் மறுகணம் நீங்கிடுதே;
அலைமகள் நீங்கிடா தொடர்ந்திடும் பேரன்பே;
இவ் அண்டத்தில் அடைக்கலமானேன் நின் திருவடி தினமே;
நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே~~~
- வித்யாசன்
வெறும் சிலையிது என்றாகிடாது விழியதனில் உயிராவாய்;
மலைமகள் நிலவென சுடர் ஒளி ஆகையிலே;
மனமது மயங்கிடாது மதியது மலர்ந்திடுதே;
பெரு வானமெனவே ஞானம் தருவாய்;
நல் கானமது நாவினில் வர வரமருள்வாய்;
கோலமகள் எழில் முகம் பார்க்கையிலே;
எழும் மனக்கோபங்கள் அனைந்திடுதே;
நின் திருவுரு அழகினைக் காண்கையிலே;
மனவுருகுது மலரடி தாழ் பணிந்திடவே;
மலரிதழ் புன்னகை பூத்திடவே;
பெரும் மனக்குழப்பங்கள் மறுகணம் நீங்கிடுதே;
அலைமகள் நீங்கிடா தொடர்ந்திடும் பேரன்பே;
இவ் அண்டத்தில் அடைக்கலமானேன் நின் திருவடி தினமே;
நின் அருளது வேண்டும் தாயே;
மன இருளது நீங்கியே நல் குணமது வேண்டியே
நின் அருளது வேண்டும் தாயே~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக