சனி, 7 நவம்பர், 2015

ஆசை மொய்க்குதடா

ஆசை மொய்க்குதடா
கண்ணா...
நின் அழகென்னை கட்டி இழுக்குதடா

பாசை திக்குதடா
கண்ணா...
என் பார்வை திக்கெல்லாம் தேடுதடா

மோகம் கூடுதடா
கண்ணா....
நின் ஞாபகம் மெதுவாய் தின்னுதடா

ஏக்கம் விம்முதடா
கண்ணா...
மார்க்கம் யாவும் நீயென நீளுதடா

புல்லாங்குழல் எடுத்து ஊதிடடா
கண்ணா...
அல்லாது போனால் என் பொழுதது புலராதடா

கண்ணா ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக