சனி, 7 நவம்பர், 2015

வானளாவி மேவுதே கண்ணம்மா~~~

பேரன்பு வைத்தேன்
அதுவே உலகில் பெரிதென்று நினைத்தேன்
ஓர் நாளது பிரியுமென்பது அறியாது
ப்ரியங்களை புற்றாய் வளர்த்தேன்


எந்நிலையிலும் மறவேன் என்றுரைத்தேன்
எனை மீறியது வழி மாறிப் போகதென்று சுகித்தேன்
வானவெளியது பரந்ததென்று அறியாது கிளியினை இருதயக் கூட்டினில் அடைத்தேன்


நேர்வது எனதில்லை என்பது புரியாது நிகழ்ந்தது பேதமை
பாலென பார்த்தவை யாவுமே கள் என ஆனதே வேதனை
கோபமுள்ளது வீசவே காதல் மெல்லென கசந்ததே
வாழ்வே நீயின்றி என்றது நீங்கியே நீயாரோ நான் யாரோ என்றானதே


அங்கமது தீண்டியதும் மனமெங்கும் உலாவியதும் மாயையென்று ஆகியதே
மங்கள நாளதனில் துன்பமதை நின் ஞாபகங்கள் தந்ததே
சிந்தையிலே சிந்தியபடி பல காலம் உருண்டோடியதே
தேகமது தோய்திங்கு சடமாகினும் நாளும் நின் நேசமதைத் தேடுதே 


மாறிவரும் யாவையும் கடந்து மறந்திங்கே வாழ்வினும்
பொய் பேதமைத் தாண்டியே நம் மெய் அன்பு வானளாவி மேவுதே

கண்ணம்மா~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக