சனி, 7 நவம்பர், 2015

** இந்து மதம் மதமற்றது **



மதம் சார்ந்து எதையும் என் மனம் பார்ப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மதம் தான் ஒவ்வொரு மனிதனையும் பக்குவப்படுத்துகிறது. அவர்களது உள்ளங்களுக்கு ஒழுக்க ஆடைகளை கட்டி விடுகிறது.
மதம் தீவிரமாகும் போது மட்டுமே மதம்பிடித்த யானையாகி பலமான மரங்களையே சாய்த்து விடுகிறது. மும்மதங்கள் இந்தியாவில் உள்ளது. நான் இந்து மத்தத்தைச் சார்ந்தவன். கிறிஸ்துவ மத போதனைகள் எனக்கு போதை தரும் வார்த்தைகள். குரான் குறித்து பெரிதும் அறியாதவன். ஆயினும் முஸ்லீம் மத கட்டுப்பாடு என்னை கதி கலங்க வைத்துள்ளது.
எனக்கு கிறிஸ்தவ நட்புகளே அதிகம். சர்ச் செல்லும் பழக்கம் உண்டு. இவர்களின் மதக் கோட்பாடும் பழகும் விதமும் ஒத்தே அமைந்த ஒன்று. முஸ்லிம் நட்பு மிக சொற்பமே. தாமரை இலை தண்ணீர்போல். எனக்கு நோன்பு கஞ்சி மீது பெரும் ஆசை என் அம்மா அருகிலிருக்கும் பள்ளிவாசல் வழங்கப்படும் அதனை பிறர் மூலம் வாங்கித் தருவார்கள். இன்புற்று ரசித்து பருகியதுண்டு. என் இல்லத்தின் அருகில் இரு பள்ளிவாசல் தினமும் விழித்தால் தென்படுவதுண்டு. தொழுது பழக்கமில்லை. ஆசைஉண்டு.
ஆலய மணியாக இதயத்தில் ஒலித்துக் கொண்டிருப்பது இந்து மதம். என் அப்பா முருக பக்தர். சதா முருகனையே வேண்டி வாழ்வில் நிறை கண்டவர். பால்ய வயதிலிருந்தே அதை பார்த்தே முருகன் மீது முழு அன்பானேன். அப்பாவிற்கு மூட பழக்கம் முழு நம்பிக்கை அற்றவர் ஒரு நாளும் மாலை அணிதல், உணவருந்தாமல் இருத்தல் வேல் குத்துதல் தீ மிதித்தல் என எதன்மீதும் பற்று அற்றவர். மென்மையான பக்தி.
இதுவெல்லாம் எனை இந்து மதத்தின் மீது சவாரி செய்ய வைக்கவில்லை இதை எல்லாம் தாண்டி நிறைய எனக்கு நேர்ந்ததே அதன் மீதான பெரும் ப்ரியம்.
எனக்கு திருநீர் சந்தனம் குங்குமம் சவ்வாது பூக்கள் ஊதுபத்தி இவைகளென்றால் நாளெல்லாம் அதன் நறுமணத்தில் மயங்கியிருப்பேன். இது அத்தனையும் இந்து ஆலயத்தில் உண்டு...
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் படித்த அனுபவம் மட்டுமின்றி அதன் உண்மைகள் பிடித்தமைக்கு காரணம். நிறைய கற்று கொடுக்கிறது. யாரிடம் எப்படி பேச வேண்டும். எப்படி பழக வேண்டும் என்பதை. ஏன் என்றால் சிலருக்கு எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரிவதில்லை. சமீபத்தில் அப்படி ஒரு அழைப்பு. அது வளர்பாகவும் பழக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இந்து மதம் அதை எந்நேரத்திலும் பண்பினை அறிவுறுத்த மறுப்பதில்லை.
இந்து மதத்தின் பேரின்பதை ஒருமுறையில் கூறிவிட முடியாது. அது அன்பின் சந்நிதானம். நிதானம். பிரதானமாகும். ஒரே மூச்சில் சொல்லிடலாகும்... படித்திட முடியாது... அது கடலை குடித்திடும் முயற்சியாகும்~~~
-தொடரும்....

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக