வில் ஒன்று
அம்பு கொண்டு
சூரன் கொன்று
எதிரியை வீழ்த்தினோமென்று
கர்வம் கொள்ளாதே
ராமா .....
மறந்திடாதே கண்ணயர்ந்து
இலங்கேஸ்வரன் பெயர் கொண்டு
ராவணன் மீதமுண்டு
பெருகும் வீரமுண்டு
பயமின்றி பத்துதலை கண்டு
எதிரிலே போரிட்டு நின்று
வெல்லும் பலமுண்டு ?
கேட்டு வா காட்டில் வாழும் ராமனை இன்று ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக