வெள்ளி, 22 ஜூலை, 2016

ஞாபகக் குருதி

தவம் புரியும் முனிவரின் தியானத்தை சிதைக்கும் நிகழ்வாகவே பொருந்துகிறது நம் வாழ்வு. 

துன்பம் தோய்ந்த அறிவு நிலை அசுத்தமான எண்ணங்களை சலவை செய்ய அனுமதிப்பதில்லை.

நம்பிக்கையின் பாத்திரம் உடையும் போதெல்லாம் உள்ளங்கையை வெட்டி எறிய முற்படும் ரேகை கத்தியின் கூர்மை மழிக்கலாகாது.

பசி தாண்டி தேடும் கால்தடங்களின் அலை ஒரு போதும் ஓய்வதில்லை மாறாக அது உள்ளிருப்பவற்றை வெளிக்கொணரும் கிளிஞ்சலாகும்.

அன்பின் தலைக்கணம் முள் கிரீடமாகையில் ஏற்றுக்கொள்ளக் கூடும் சிலுவையும் அதிலிருந்து வழியும் ரத்தமும் நேசத்தின் விசுவாசிகள்.

வறண்ட உள்நாக்கில் ஒட்டிய வார்த்தைகள் யாவும் கிடந்து உருண்டிட முடியாது வளைந்து தாகம் உறிஞ்சுகையில் விழும் நிழல் குளிர் நீரல்ல கரை புரண்டோடும் ஞாபகக் குருதி~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக