வெள்ளி, 22 ஜூலை, 2016

விரகம்...

மறைக்கப்பட்ட அழகின் நூல் கோர்ப்பு நழுவலில் விழிக் கண்ணாடி பாதரசமெங்கும் வழிகிறது விரகம்...

ஒரு தழுவலுக்கு முன் விரல் தீண்டலின் உஷ்ணத்தில் உடலெங்கும் பற்றி எரியும் காட்டினை அனைக்கிறது சிறு வியர்வை...

இக்கடுங் குளிரில் சிக்கிமுக்கி கல்லென உரசிடும் இதழ் நுனியில் கனல் சிவக்கிறது...

அக்னி மழையில் எழுந்த சர்பமொன்று மலை மீதேறி இடை கிளை பற்றி இலை ஒலிந்து பின்னது தூரலாய் வீழ்ந்து இளைப்பாறியது...

ஆப்பிள்களும், கறுந்திராட்சைகளும் குலுங்கும் தோட்டத்தில் தாளிட வாய்ப்பற்ற அடர் இருளில் நிர்வாணம் வெட்கத்தில் ஆடை உதறி குறி சொல்லுகிறது...

இனி...
இந்த சாமக் கோடாங்கியிலிருந்து எழும் சப்தம்
ஒவ்வொரு படுக்கையிலும் உடுக்கையாய் எதிரொலிக்கும்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக