வெள்ளி, 22 ஜூலை, 2016

ஈசனே

கொட்டிடும் தேளென துடித்திடும் மனக் கவலையினை காலால் எட்டி மிதித்து
சுடர் விட்டு எரியும் நினைவதனை வேகமாய் கொளுத்து
அதில் தெறித்து பறக்கும் தனலெடுத்து உடையென உடுத்து
கரு பெட்டியில் உருவிட்ட சடமிது என்பதனை நிலை நிறுத்து
அது ஓர்நாள் மண்சட்டியில் புகைந்து மாய்ந்திடும் வகையே நம் தலை எழுத்து
பத்தென பெற்றதெல்லாம் ஆசைப் பற்றதனாலே உண்மை உணர்த்து
பெரும் பட்டினி வந்துனை வாட்டுகையில் ஏதும் பெரிதிருந்தால் அதன்முன் நிறுத்து
தொட்டென தீரா உறவு யாவும் நெருங்கிடின் சட்டென மறையும் கானல் நீரூற்று
கிட்டா மானிட வாழ்விதுவே ஆயினும் பட்டதே போதுமடா
மறுபிறப்பு அறுத்தின்றே மாயமது விட்டொழிய இக்கணமே நின் உயிர் பூட்டிடடா

தாண்டவ ஈசனே~~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக