வெள்ளி, 22 ஜூலை, 2016

பரா சக்தி

யாவுமிங்கு வெற்றுப் பொருளடி
பெரும் அன்பும் மாயும் விட்டுப் பிரிந்த சில நொடி
அடுக்கடுக்காய் கட்டி வைத்ததெல்லாம் கனவாய் போகுமடி
கெட்டு குப்பையிலேயிடும் எச்சில் பொருளாய் ஓர் நாள் நம் உடலாகுமடி
ஆசை தொட்டுப் படர்ந்ததெல்லாம் வெட்டி புதைக்கையிலே அற்பமாவதேனடி
அனைத்தையும் அறியவைத்து அதன் வழி செல்லாது ஆடச்செய்யும் கோலமென்னடி
உற்றுப் பார்த்தால் அவனியில் ஒன்றிலுமில்லை உன்போல் அழகடி
எனை சற்றே தீபமென எரியவைத்து அதன் ஜோதியாய் நீ யெங்கும் பரவி நிற்பதென்னடி
பரா சக்தியே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக