வெள்ளி, 22 ஜூலை, 2016

மீள்

சொல்லதனைச் செய்திடுவேன் 
மாறாது நிதம் நம்பிடு என் தோழி

சுடர் காலையிலே மலர் சோலையிலே 
நல் செய்தி வரும் என் தோழி

சிறு சோகமதனில் நீயும் சோர்ந்திடலாமோ
 சாய்ந்திட இரு தோளிருக்கு என் தோழி 

நினை பாராது போவேனென 
பரிகாசம் பேசிடலாமோ என் தோழி

வாராது வஞ்சித்து போவேனென
 முகம் வாடிடலாகுமோ என் தோழி 

மனப்பாரங்கள் நீங்கிட காதினில் 
பல ஞானக்கதைகள் உரைப்பேனடி என் தோழி

பிரிவொன்று வந்ததனைக் கண்டு பேதமை கொண்டு 
கோபம் கொள்வதேனடி என் தோழி 

உடல் விட்டு உயிர்பரிந்திடுமேயன்றி
நினை ஒரு கணமும் என் மனம் நீங்கிடலாகாது என் தோழி......

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக