வெள்ளி, 22 ஜூலை, 2016

#‎மகா‬ ‪#‎சக்தியே‬


யாவும் உணர்தல் வேண்டும் யமக்கு
நிலை மாறுதல் நிகழ் கூடாது நீதி விளக்கு
உடல் சரிபாதியானவளே எமக்கு
ஊழ்வினை தீர்ப்பாய் யிதுவே எம் வழக்கு ;

மகா சக்தியே...

அலைமோதுமென் மனதினை நிலைகொள் செய்
சிலைபோலவேயென் சிந்தனை நிரை செய்
பிழையாவையும் சீராக்கி புகழ் தேடா வை
கலைமகளே எமக்கு எந்நாளும் நீயே மெய் ;

மகா சக்தியே...

பெருங்காடும் சிறு கூடாகும் பாயும் பறவைக்கு
அறியார்கோ சிறு கூடும் பெருங்காடாகும்
நல்தெளிவு மதிதன்னில் யாவும் நிலவொளியாகும்
விளையும் தீதும் நன்றுமிரண்டும் நின் வடிவாகும் ;

மகா சக்தியே...

நாடும் எதுவாகினும் உள்ளிருக்கும் பொருள் நீயாகிடும்
வாடும் மனநோயின்றி உனைப்பாடும் வரம் வேண்டும்
கூடும் சிதை நெருப்பாகினும் நினைக் காணும் அருள் வேண்டும்
ஓடும் சாம்பலிலும் நின் நாமம் ஓதிப் பரவ வேண்டும் ;

மகா சக்தியே...

மாய்ந்து மறுபடியும் நின் பாதமாகி
ஆய்ந்து நல்லொளியாய் விழி கலந்து
மாயை அழிந்து வெண் மலரிதழாய்
வீழ்ந்து தவமிருப்பேன் நின் தாள் பணிந்தே ;

மகா சக்தியே ; மகா சக்தியே...
மகா சக்தியே....

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக