வெள்ளி, 22 ஜூலை, 2016

தடுக்கவில்லை

அந்தப் பறவை பறக்கையில்
எந்த இறகும் உதிரவில்லை


அந்தச் சூரியன் மறைகையில்
எந்தக் கைகளும் ஏந்தவில்லை


அந்த வானம் அழுகையில்
எந்த நிலமும் தடுக்கவில்லை


அந்தப் பூக்கள் உதிர்கையில்
எந்த இலைகளும் தற்கொலை செய்யவில்லை


அந்த நதி வற்றுகையில்
எந்தச் சலனமும் நிகழவில்லை


அந்த நிலவு தொலைந்ததில்
எந்த வைகறையும் விடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக