வெள்ளி, 22 ஜூலை, 2016

வைகறை வைகறை

இனி வைகரை பார்க்கும் போதெல்லாம் கண்ணீராக ஓடும்
இதுதான் கடைசி சந்திப்பென்று தெரிந்திருந்தால் அகன்றிடாது உன்னிருகை பற்றி துணையாய் இருந்திருப்பேன்

எத்தனை முறை பார்த்தாலும் உன் முக புத்தகம் என் அழுகையை பார்த்து நகைக்கிறது

மறுபடியும் மறுபடியும் வாசிக்கின்றேன் உன் எழுத்துக்களை அது உன்னைப்போலவே இப்பொழுது மௌனமாய்

நம்பமுடியவில்லை எந்த ஆறுதல் வார்த்தையும் உன் இழப்பின் நிழல் தீண்டிட இயலாது

ஒரு வேளை உனை உயிர்பிக்க இன்னொரு உயிர் வேண்டுமெனில் எனை தருகிறேன் இதை விட இன்பம் வேறென்ன எனக்கு

அத்தனைக்கும் மேல் உன் இழப்பறிந்து இருக்கும் குடும்பத்தாரின் நிலையினை எங்ஙனம் என் விழி காண இயலும்

அன்பின் பெரும் காடு துன்பமெனும் நிலைப்பாடாகையில் வெறுமென உனை எப்படிக் காண்பேன்

என் மனக்கரை உடைந்து நின் மீது வீழ்ந்து மீண்டும் வா வா என அழைக்கிறது
நீயோ எனை நினை ஒவ்வொரு வைகறை வைகறை என்கிறாய்~~~

‪#‎ஆழ்ந்த‬ இரங்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக