வெள்ளி, 22 ஜூலை, 2016

ராதையின் குரல் கேளாயோ

கண்ணா பாராயோ
ராதையின் குரல் கேளாயோ
பிருந்தாவனம் வாராயோ
புல்லாங்குழல் இசை தாராயோ


வழிமீதிலே விழி எதிர்பார்ப்பிலே
வலி மீறுதே வருகை பொய்யாகையிலே
என் எண்ணம் வண்ணம் யாவும் கண்ணன் பாதையிலே...


வாட்டும் இரவை நான் காட்டவா
வரம்பு மீற முடியா சிறு கூட்டு பறவை நான் அல்லவா
வேதனை தீர்க்க மாலை சூட்டவா
உனை சேரக் காத்துக் கிடக்கும்
பாவை நான் அல்லவா
ஆயர்பாடி அழகு மாதவா
நான் ஆராரோ பாடிட என் மடிமீது சாயவா

கண்ணா பாராயோ....

ராதையின் குரல் கேளாயோ...



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக