#இன்னும்...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வு வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்...
நம் பிரிவது நல்லின்பமா...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வு வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்...
நம் பிரிவது நல்லின்பமா...
உனைக் கண்டால்
கடும் துன்பமும் தீருமம்மா
உனைக் காணாதிருந்தால்
கண்ணிருந்தும் பயனென்னமா
வருந்தும் என் நெஞ்சத்துக்கே
அதை தீர்க்கும் நல் மருந்து நீதானம்மா
அதை மறந்தே நீ சென்றால்
நானிருந்தும் இறவாப் பிணம்தானம்மா...
எனைத் தொடரும் நிழல் நீதானம்மா
உனைத் தொலைத்தால் நான் வீழ்வேனம்மா
என்மீது படரும் கொடி நீதானம்மா
அதனை சுமத்தல் பாரமல்ல பேரின்பமம்மா
காணும் யாவிலும் உன் வண்ண முகம்மம்மா
வரும் கனவிலும் வலம் வருவது நீயம்மா...
என்னிருதயம் தட்டிப் பார்
உன் பெயர் சொல்லுமம்மா
நீ சற்று எட்டி நின்றாலும் என் மனமதை தாங்கிடுமா
ஒரு தட்டில் இவ்வுலம் வைத்து தந்தாலுமம்மா
எனை மாரினிலிட்டு தட்டும் தாலாட்டுக்கு அது இணையாகுமா
என் சிறு கோபம் உனக்கொரு குறையாகுமா
உன் குடல் ஒட்டி பிறந்தவன் நானம்மா...
கடல் மேலும் நீ பெரிதம்மா
நின் காதல் முன் வான் மிகச் சிறிதம்மா
மண் யாவும் தந்தாளும் உனக்கீடாகுமா
கண்ணிமைப்போல் எனைக் காத்திட வேறாரும் உனைப்போல் உண்டோமா
மன வேதனை தீர்த்திடமா
பெரும் மாற்றம் தந்திடும் மந்திரப் புன்னகை ஒன்று வீசிடம்மா...
காலம் பல கழிந்தாலுமே நம் நேசம் மாறாதம்மா
கோலம் சிதைந்தாலுமே கொண்ட பாசம் மறையாதம்மா
என் உயிர் வாசம் நீதானம்மா
இதிலில்லை ஓர் நாளும் வேசமம்மா...
இன்னும்...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வது வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்
நம் பிரிவது நல்லின்பமா~~~
- வித்யாசன்
கடும் துன்பமும் தீருமம்மா
உனைக் காணாதிருந்தால்
கண்ணிருந்தும் பயனென்னமா
வருந்தும் என் நெஞ்சத்துக்கே
அதை தீர்க்கும் நல் மருந்து நீதானம்மா
அதை மறந்தே நீ சென்றால்
நானிருந்தும் இறவாப் பிணம்தானம்மா...
எனைத் தொடரும் நிழல் நீதானம்மா
உனைத் தொலைத்தால் நான் வீழ்வேனம்மா
என்மீது படரும் கொடி நீதானம்மா
அதனை சுமத்தல் பாரமல்ல பேரின்பமம்மா
காணும் யாவிலும் உன் வண்ண முகம்மம்மா
வரும் கனவிலும் வலம் வருவது நீயம்மா...
என்னிருதயம் தட்டிப் பார்
உன் பெயர் சொல்லுமம்மா
நீ சற்று எட்டி நின்றாலும் என் மனமதை தாங்கிடுமா
ஒரு தட்டில் இவ்வுலம் வைத்து தந்தாலுமம்மா
எனை மாரினிலிட்டு தட்டும் தாலாட்டுக்கு அது இணையாகுமா
என் சிறு கோபம் உனக்கொரு குறையாகுமா
உன் குடல் ஒட்டி பிறந்தவன் நானம்மா...
கடல் மேலும் நீ பெரிதம்மா
நின் காதல் முன் வான் மிகச் சிறிதம்மா
மண் யாவும் தந்தாளும் உனக்கீடாகுமா
கண்ணிமைப்போல் எனைக் காத்திட வேறாரும் உனைப்போல் உண்டோமா
மன வேதனை தீர்த்திடமா
பெரும் மாற்றம் தந்திடும் மந்திரப் புன்னகை ஒன்று வீசிடம்மா...
காலம் பல கழிந்தாலுமே நம் நேசம் மாறாதம்மா
கோலம் சிதைந்தாலுமே கொண்ட பாசம் மறையாதம்மா
என் உயிர் வாசம் நீதானம்மா
இதிலில்லை ஓர் நாளும் வேசமம்மா...
இன்னும்...
என் நேசத்தில் சந்தேகமா
அதை பரிசோதித்தல் ஞாயமா
நீயில்லா வாழ்வது வாழ்வாகுமா ?
எண்ணிப்பார்
நம் பிரிவது நல்லின்பமா~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக