வெள்ளி, 22 ஜூலை, 2016

இறைவா‬


ஒன்றுமில்லா வாழ்க்கையில்
ஒவ்வொன்றாய் கொடுத்தாய்
பின் னது என்னவென்று ஏனென்று அறியுமுன் அடுத்தடுத்து தட்டிப் பறித்தாய்
மற்றதற்கு ஏதுமற்ற மானிடர்க்கு யாவும் அறிய வைத்தாய்
குற்றமது நிறைந்தே கொஞ்சம் நெஞ்சினில் நன்மை புகுத்தாய்
மற்றவரை தன்போல் எண்ணாது தானெனும் ஆணவம் அளித்தாய்
கற்றதெல்லாம் கானலாக்கி கர்வத்தில் அழித்தாய்
இங்கே யாவரும் பெற்றதெல்லாம் நிலையற்றதாய் படைத்தே
இவ்வெற்றுடலுக்குள் நீங்கா ஆசை வளர்த்தாய்
கட்டுடல் களைந்தே வெறும் கட்டையென நீட்டிப்படுக்கையிலே
விட்டுக் கொடுக்க இயலா இம்மனதை
#இறைவா நீ எங்கே ஒழித்து வைத்தாய்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக