அதிகாலைப் பேரொளி இரு கண் விழி பாயுதடி
மலர் சோலை மரயிலைகள் பச்சை தோகை விரித்தாடுதடி
கானக் குயில்களின் குரல் ஒலி காதினில் தேனென வழியுதடி
மோனப் புன்னகை வீசிடும் பூக்களின் இதழமர்ந்து வண்டின்பம் சேர்க்குதடி
வானப் பெருங் கடலெங்கும் மேக அலை மோதிடாது பறவைகள் தாவிப் பறக்குதடி
வெள்ளி யாழென வளைந்தே பொங்குமருவி சந்தமிட்டு புது ராகம் பாடுதடி
குழல் காய எங்கும் நெழிந்தோடும் ஆறு தன் கூந்தழ் உலர்த்த நீளுதடி
இயற்கையின் உயர் இச்செய்கையின் அற்புதம் கண்டே மனம் கற்ச்சிலையாய் நிற்குதடி
மலர் சோலை மரயிலைகள் பச்சை தோகை விரித்தாடுதடி
கானக் குயில்களின் குரல் ஒலி காதினில் தேனென வழியுதடி
மோனப் புன்னகை வீசிடும் பூக்களின் இதழமர்ந்து வண்டின்பம் சேர்க்குதடி
வானப் பெருங் கடலெங்கும் மேக அலை மோதிடாது பறவைகள் தாவிப் பறக்குதடி
வெள்ளி யாழென வளைந்தே பொங்குமருவி சந்தமிட்டு புது ராகம் பாடுதடி
குழல் காய எங்கும் நெழிந்தோடும் ஆறு தன் கூந்தழ் உலர்த்த நீளுதடி
இயற்கையின் உயர் இச்செய்கையின் அற்புதம் கண்டே மனம் கற்ச்சிலையாய் நிற்குதடி
நீ பாராய்
என் தோழி~~~
- வித்யாசன்
என் தோழி~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக