வெள்ளி, 22 ஜூலை, 2016

இசை ராஜா

இவ்வானம் எந்நிலமென்று பாராது எந்நேரமும் பொழியக் கூடியது

இங்கிருந்து கடக்கும் மேகம் யாவும் ஹார்மோனியமாவதில் எந்த வியப்புமில்லை

இவ்விடத்தில் பறக்கும் வெள்ளைபுறாக்கள் மட்டுமல்ல எல்லா சிறகுகளும் இசைக்கும் புது ஸ்வரம்தான்

அத்தனை உணர்வுக்கும் ஒரே குரல்தான் அதனை எத்தனை முறை கேட்டாலும் அது சுக வரம்தான்

இதிலிருந்து வீழும் துளிகள் பெருங்கடலை மட்டுமல்ல சிறு குட்டையையும் குளிர்விக்கும்

ஆம்...
இந்த இசை தட்டுதான் நித்தமும் தேய்ந்து வளர்ந்து நம்மை மட்டுமல்ல ஒவ்வொரு இரவையும் தாலாட்டி தூங்கவைக்கிறது
மானிடரை எல்லாம் மயக்கும் இசையில் குழந்தையாக்கும் எங்கள் இசை ராஜா குழந்தைக்கு
இனிய தாலாட்டு நாள்

வாழ்த்துக்கள்~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக