வெள்ளி, 22 ஜூலை, 2016

- தம்பி

தேசம் தேம்புதடா - தம்பி
நடுத்தெருவினில் மோசம் நிகழுதடா
யாவுமிங்கு முழு வேசமடா - தம்பி
எதனையும் நீ எளிதினில் நம்பிடாதேடா


பெரும் பாசம் வைப்பாரடா
அதனருகில் பணம் வாசம் பிடிப்பாரடா
அடிமை சாசனம் செய்வாரடா - தம்பி
அதில் அவர் மாண்டிடும் வரை ஆண்டிட பாசாங்கு செய்வாரடா


காணும் உறவது பொய்யேடா
நிலம் காய்ந்திட்டால் உழுதிட எவர் வருவாரடா
தன்மானம் உள்ளோர் வாழ்வதுடா - தம்பி
தடைபட்டே தவியாய் தவிக்குதடா


செய் நன்றி மறக்கும் ஈனப்பிறவி இங்குண்டேடா
மெய் கண்டது ஓர் நாளும் பொய்வுரைப்பதில்லையடா
நான்கடி தீக்கிரை நம் வாழ்வேடா - தம்பி
வாழும் வரை நீ எவர் நம்பியும் தலை குணிந்திடாதேடா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக