வெள்ளி, 22 ஜூலை, 2016

ஞானம்

எனதாழ தனிமையில் உனதான இனிமை இருளொளியாய் மனவறையெங்கும் சுடர் குளிர்கிறது
புறங்களைத் துறக்கும் இமைகளின் இறகினில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் நினை வகத்தில் ஞாபகம் உதிர்கிறது
துரத்தும் எண்ணங்கள் வடிவிழந்து புலன் விலகித் துகளாகிட தூய்மை புது மலராய் இதழ் விரிகிறது
துறப்பின் திண்ணம் தெளிவாகையில் நிலையற்றது யாவுமாகிட மெய் மாயையின் நிழலென ஞானம் வினவுது~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக