வெள்ளி, 22 ஜூலை, 2016

புத்தனாய்

ஒரு புத்தகமாய் உனை வாசிக்க
மென்னிதழ்களில் நீ வார்த்தை முத்தமாகிறாய்


ஒரு புத்தனாய் கண்மூடி நானமர
என்மீதேறி போதி மரமாய் நீ வளர்கிறாய்


ஒரு புள்ளியாய் நானுனை வரைய
என்னுள் சுழல் பூமியாய் நீ வலம் வருகிறாய்


ஒரு விண்மீனாய் நான் துடிக்க
இருள் வானமாய் நீண்டெனை ரசிக்கிறாய்


ஒரு பனித்துளியாய் நானுனை சுமக்க
பகல் ஒளி உளியாய் நீ எனை உடைக்கிறாய்


ஒரு நிர்வாண ஆடையாய் நானுனக்கிருக்க
நீ அதை ஆசை ஆசையாய் உடுத்துகிறாய்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக