வெள்ளி, 22 ஜூலை, 2016

கள்ளழகரே

தமிழ் மண்ணாளும் மா மதுரையிலே
எனை எந்நாளும் அருள்பவளே
கயல் துள்ளி விளையாடும் வைகைக் கரையினிலே

 தங்கக் குதிரையில் தாவி வருவான் கள்ளழகரே

பெரும் தேர் வடமிழுக்கும் நான் வீதியிலே
எம்பெருமானுடன் எழுந்தருள்வாள் மணக்கோலத்திலே
கடலென பொங்கிடும் தலை நிறை கூட்டத்திலே
அதைக் கண்டிட போதாது இரு கண் மாத்திரத்திலே


ஊர் கூடி தேடி வருவர் கள்ளழகர் கோலத்திலே
தாளிக்கயிறு ஏறிய தங்கையினைக் காண இயலாத கோபத்திலே
மண்டபங்கள் பல தங்கி பக்தர்களின் போகத்திலே
அழகர் மலை மீது வந்தமர்ந்து சினம் தணித்தார் ஆனந்தத்திலே


சிக்கல் யாவும் தீர்த்திடுவார் சொக்கர் நல் மார்க்கத்திலே
சக்தி வடிவானவள் மும்மார் மறைந்திடவே அமர்ந்தாள் அவர்தம் பக்கத்திலே
பக்தி முக்தி தரும் சித்திரை திருநாள் உச்சத்திலே
இதனைக் கண்டவர் யாவரும் மகிழ்ச்சியில் பொங்கிடுவர் மீனாட்சி திருக்கல்யாணத்திலே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக