தமிழ் மண்ணாளும் மா மதுரையிலே
எனை எந்நாளும் அருள்பவளே
கயல் துள்ளி விளையாடும் வைகைக் கரையினிலே
தங்கக் குதிரையில் தாவி வருவான் கள்ளழகரே
எனை எந்நாளும் அருள்பவளே
கயல் துள்ளி விளையாடும் வைகைக் கரையினிலே
தங்கக் குதிரையில் தாவி வருவான் கள்ளழகரே
பெரும் தேர் வடமிழுக்கும் நான் வீதியிலே
எம்பெருமானுடன் எழுந்தருள்வாள் மணக்கோலத்திலே
கடலென பொங்கிடும் தலை நிறை கூட்டத்திலே
அதைக் கண்டிட போதாது இரு கண் மாத்திரத்திலே
ஊர் கூடி தேடி வருவர் கள்ளழகர் கோலத்திலே
தாளிக்கயிறு ஏறிய தங்கையினைக் காண இயலாத கோபத்திலே
மண்டபங்கள் பல தங்கி பக்தர்களின் போகத்திலே
அழகர் மலை மீது வந்தமர்ந்து சினம் தணித்தார் ஆனந்தத்திலே
சிக்கல் யாவும் தீர்த்திடுவார் சொக்கர் நல் மார்க்கத்திலே
சக்தி வடிவானவள் மும்மார் மறைந்திடவே அமர்ந்தாள் அவர்தம் பக்கத்திலே
பக்தி முக்தி தரும் சித்திரை திருநாள் உச்சத்திலே
இதனைக் கண்டவர் யாவரும் மகிழ்ச்சியில் பொங்கிடுவர் மீனாட்சி திருக்கல்யாணத்திலே~~~
- வித்யாசன்
எம்பெருமானுடன் எழுந்தருள்வாள் மணக்கோலத்திலே
கடலென பொங்கிடும் தலை நிறை கூட்டத்திலே
அதைக் கண்டிட போதாது இரு கண் மாத்திரத்திலே
ஊர் கூடி தேடி வருவர் கள்ளழகர் கோலத்திலே
தாளிக்கயிறு ஏறிய தங்கையினைக் காண இயலாத கோபத்திலே
மண்டபங்கள் பல தங்கி பக்தர்களின் போகத்திலே
அழகர் மலை மீது வந்தமர்ந்து சினம் தணித்தார் ஆனந்தத்திலே
சிக்கல் யாவும் தீர்த்திடுவார் சொக்கர் நல் மார்க்கத்திலே
சக்தி வடிவானவள் மும்மார் மறைந்திடவே அமர்ந்தாள் அவர்தம் பக்கத்திலே
பக்தி முக்தி தரும் சித்திரை திருநாள் உச்சத்திலே
இதனைக் கண்டவர் யாவரும் மகிழ்ச்சியில் பொங்கிடுவர் மீனாட்சி திருக்கல்யாணத்திலே~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக