வெள்ளி, 22 ஜூலை, 2016

#‎கண்ணா‬... என்ன மனமிதுவோ

என்ன மனம் இதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ


என்னை நான் மறப்பதோ
உன்னை என்னில் எங்ஙனம் மறைப்பதோ


சொல்லில் பொய் வைப்பதோ
அதன் பொருள் உண்மைக் காதல் இருப்பதோ


விண்ணில் யாவும் நின் முகம் சிரிப்பதோ 
அது மண்ணில் வீழ்ந்தால் முத்தம் கொடுப்பதோ

 காற்றில் எங்கும் உந்தன் ஒலி கேட்பதோ
அதன் பாட்டில் தான் இலை தன் தலை அசைக்குதோ


கண்ணா...
என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட லாகாதோ
என்ன மனம் இதுவோ ;


அன்பே துன்பமாவதோ
அது நின்மேல் கொண்ட பாசமல்லவோ


என் மேல் நேசம் குறைவதுவோ
அது தீர்ந்தால் உயிர் எங்ஙனம் வாழ்வதுவோ


கண்ணில் உறக்கம் கொள்வதுவோ
கள்வா நீ கனவில் உலா வருவதுவோ


நானெனில் உன்னில் அடங்கியதுவோ
தானென பிரிவது இறப்பிலும் நிகழாதது அல்லவோ


என்ன மனமிதுவோ
உனை எண்ணிடலாகாது இருந்திட ஆகாதோ~~~


கண்ணா...
என்ன மனமிதுவோ



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக